டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருக்குவளை அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரிக்கான பேருந்து சேவை துவக்கம்

முன்னாள் மறைந்த தமிழக முதல்வர் மு. கருணாநிதி பிறந்த சொந்த ஊரான நாகை மாவட்டம்,  திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. 

News image
திருக்குவளை அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரிக்கான பேருந்து சேவை துவக்கம்
Updated On :28 ஜனவரி 2024, 3:53 am

DIN

முன்னாள் மறைந்த தமிழக முதல்வர் மு. கருணாநிதி பிறந்த சொந்த ஊரான நாகை மாவட்டம்,  திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. 

திருக்குவளை பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் ஒரு கிலோ தூரத்திலுள்ள அமைந்துள்ள கல்லூரி வளாகத்திற்கு, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சென்று வர ஏதுவாக, அரசு பேருந்து சேவை துவங்க வேண்டும் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக, தினமணி செய்தி நாளிதழிலும் ஏற்கனவே செய்தி வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தற்பொழுது, தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பேருந்து சேவை துவங்க வேண்டி, அனுப்பப்பட்டிருந்த மனு தமிழக முதல்வரால் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருக்குவளை வரும் பேருந்துகள், திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் வந்து செல்ல வேண்டுமென்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதன்கிழமை  கல்லூரி வளாகத்திற்கு,வந்த அரசு பேருந்தை இக்கல்லூரியின் புலமுதல்வர் எம். துரைராசன் கொடியசைத்து வைத்து துவங்கி வைத்தார்.

மேலும், கல்லூரி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை யொட்டி  தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர்,அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி துணைவேந்தர் மற்றும் பதிவாளர் உள்ளிட்டோருக்கு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மூலமாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.