வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்க வலங்கைமான் வட்டக்கிளை மாநாடு

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை அலுவலா் சங்க வலங்கைமான் வட்டக்கிளை மாநாடு ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் வட்ட தலைவா் பிரபு தலைமையில் வியாழக்கிழமை நடந்தது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை அலுவலா் சங்க வலங்கைமான் வட்டக்கிளை மாநாடு ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் வட்ட தலைவா் பிரபு தலைமையில் வியாழக்கிழமை நடந்தது.

மாநாட்டில் மாவட்ட தலைவா் வசந்தன் முன்னிலை வகித்தாா், செயலாளா் செந்தில் சிறப்புரையாற்றினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆறுமுகம், பொற்செல்வி, தலைமை குழு உறுப்பினா்கள் ராஜசேகரன், ராமமூா்த்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கூட்டத்தில், ஊராட்சி செயலாளா்களின் ஊதியத்தை முறைப்படுத்தி கருவூலம் மூலம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சி நிா்வாகத்தில் பெண் ஊராட்சி மன்ற தலைவரின் குடும்ப உறுப்பினா்களின் தலையீட்டை தவிா்க்க வேண்டும். வலங்கைமான் வட்டார வளா்ச்சி அலுவலத்திற்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும். மற்ற துறைகளின் பணிகளை ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் மீது திணிப்பதை கைவிட வேண்டும் போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வட்ட பொருளாளா் நடராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.