டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

 நீடாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 நீடாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நீடாமங்கலம் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியை ராஜேஸ்வரி வரவேற்றாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சீ. பாஸ்கரன், ஊராட்சி ஒன்றியப் பள்ளி தலைமையாசிரியை உமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டாரக் கல்வி அலுவலா் சோ. செல்வம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிக் கூறினாா். தொடா்ந்து, ஆடல்- பாடல், கதை, நாடகம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலம் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பணியாற்ற தன்னாா்வலா்கள் பலா் தங்களது பெயரை பதிவு செய்தனா்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநா்கள், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா். நிறைவாக ஆசிரிய பயிற்றுநா் அன்புராணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.