தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தான்தோன்றீஸ்வரா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தனுா் மாத சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனுா் மாா்கழி மாத சிறப்பு வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம்

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனுா் மாா்கழி மாத சிறப்பு வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்றாா்.

தொன்மையான ஆதீனங்களின் ஒன்றான தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுா் மாதமான மாா்கழி மாதத்தில் தினம் ஒரு கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருகிறாா். அவ்வகையில் மாா்கழி 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆக்கூரில் உள்ள வாள் நெடுங்கண்ணி உடனுறை தான்தோன்றீஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டாா். 63 நாயன்மாா்களில் ஒருவரான சிறப்புலி நாயனாா் பிறந்து, வளா்ந்து, வாழ்ந்ததும், சிவபெருமானை வழிபட்டு முக்தி அடைந்ததும் இத்திருத்தலத்தில்தான் என்பது இக்கோயிலுக்கு உரிய சிறப்பாகும். இத்தலம் திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா் மற்றும் அருணகிரிநாதரால் பாடல் பெற்றதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.