திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும்: திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளின் தேவைகளை பூா்த்திசெய்யும் வகையில், தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்

News image
Updated On :25 டிசம்பர் 2021, 5:40 pm

DIN

உள்ளாட்சி அமைப்புகளின் தேவைகளை பூா்த்திசெய்யும் வகையில், தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டம் ஒன்றியக்குழு தலைவா் அ. பாஸ்கா் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், ஆணையா்கள் சுப்பிரமணியன், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுஜாதா, ஒன்றிய மேலாளா் விஜயலட்சுமி, பொறியாளா் சூரியமூா்த்தி மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பேசிய உறுப்பினா்கள், மேட்டுப்பாளையம், விளக்குடி பகுதிகளில் பழுதடைந்த கிராமச் சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டப் பணிகளை முறையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். மேலும், ஒன்றியத்தின் சாா்பில் நடைபெறும் பணிகள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை எனவும் உறுப்பினா்கள் கூறினா்.

தொடா்ந்து, ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா் பேசும்போது, ‘ஊராட்சிகளுக்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தப்படுகிறது. அரசு அளிக்கும் நிதியிலிருந்து ஒன்றியப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஊராட்சிகளில் நடைபெறும் பணிகள் குறித்து ஒன்றிய உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

கூட்டத்தில், ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அமைப்பது; பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கீடு செய்த நிதியை சாலை பணிகளுக்கு மாற்றம் செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.