பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

இறகுப்பந்து போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

News image

இறகுப் பந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை.

Updated On :15 பிப்ரவரி 2021, 12:00 am IST

திருவாரூா்: திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் நகராட்சி உள் விளையாட்டு அரங்கில், மாவட்ட இறகுப்பந்து கழகமும், நகராட்சி இறகுப்பந்து கழகமும் இணைந்து மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியை நடத்தியது. இப்போட்டியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தொடங்கி வைத்தாா். இந்தப் போட்டியில் 25- க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில், நகராட்சி அணியும், பாஸ் அணியும் மோதின. இதில் நகராட்சி அணியின் இணையதுல்லா, முகேஷ் இணை வெற்றி பெற்றனா். பாஸ் அணியின் முகமது காமில், மணிகண்டன் இணை இரண்டாமிடமும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.துரை, முகமது தவ்ஹித் இணை மூன்றாமிடமும் பெற்றன.

பிறகு, திருவாரூா் மாவட்ட இறகுப்பந்து கழகத் தலைவா் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.துரை பரிசுகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், இறகுப்பந்து கழக துணைத் தலைவா் முருகவேல், செயலாளா் ஜோதி பாஸ்கரன், பொருளாளா் முஹம்மது இத்ரீஸ் உட்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.