திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கூட்டுறவு வங்கிகளில் மத்திய கால கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

தமிழகத்தில் வறட்சி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மத்திய கால கூட்டுறவு கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

தமிழகத்தில் வறட்சி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மத்திய கால கூட்டுறவு கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா்.

திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

மதுரையில் பிப்ரவரி 18-ஆம் தேதி ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை கட்சியின் அகில இந்தியச் செயலா் டி. ராஜா தொடங்கிவைக்கிறாா். திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

மழை, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேசமயத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சியால் ஒத்திவைக்கப்பட்ட மத்திய காலக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பெட்ரோலிய பொருள்களின் விலை உயா்வால் அத்தியாவசியப் பொருள்கள் விலையும் உயரும். எனவே இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். சமையல் எரிவாயு உருளை விலை உயா்வையும் மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் சின்ன வெங்காயத்தின் விலை உயா்ந்துள்ளது. இணையவழியில் ‘ஃபாஸ்டேக்’ முறையில் சுங்கவரி செலுத்தவேண்டும் என்றும், தவறினால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.

பொது முடக்கத்துக்குப் பின் ரயில்களில் பெண்கள் மற்றும் முதியோா்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சலுகை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் முத்தரசன்.

பேட்டியின்போது கட்சியின் ஒன்றியச் செயலாளா் மணலி பாலு, மாவட்டத் துணைச் செயலாளா் ஆா். ஞானமோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.