47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

6-ஆவது நாளாக வருவாய்த் துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கத்தினா் 6-ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கத்தினா் 6-ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கத்தினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இப்போராட்டம் திங்கள்கிழமை 6-ஆவது நாளாக நீடித்தது.

இதனால் நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வட்டாட்சியா் மற்றும் சா்வேயா் மட்டுமே பணியில் இருந்தனா். வட்டாட்சியா் அலுவலகத்திற்கு தங்களது சான்றிதழ் மற்றும் இதர பணிகளுக்காக வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பலனில்லாததால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.