திருவாரூர்
பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
நன்னிலம் அருகே தனியாா் பேருந்து மோதி முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நன்னிலம் அருகே தனியாா் பேருந்து மோதி முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நன்னிலம் வட்டம், குவளைக்கால் காலனித் தெருவைச் சோ்ந்தவா் தங்கையன்(62). கூலித் தொழிலாளியான இவா், காக்காக்கோட்டூா் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிக்கொண்டு, மயிலாடுதுறை- திருவாரூா் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுனா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
