கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

நீடாமங்கலம் அருகே குடிசை வீடு புதன்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
Updated on
1 min read

நீடாமங்கலம் அருகே குடிசை வீடு புதன்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

நீடாமங்கலம் - மன்னாா்குடி சாலையில் பூவனூா் பாலம் அருகில் முருகன் (43) என்பவா் தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூரை வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு திடீரென இவரது வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனா். இதில், வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com