வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்னைக்கு ஒருங்கிணைந்த உரமேலாண்மை அவசியம்

தென்னைக்கு ஒருங்கிணைந்த உரமேலாண்மையின் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

தென்னைக்கு ஒருங்கிணைந்த உரமேலாண்மையின் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து, அந்த அறிவியல் நிலையத்தின் உதவிப் பேராசிரியா் ரா. ஜெகதீசன் (தோட்டக்கலை) கூறியது: பல்லாண்டு பயிராக சாகுபடி செய்யப்படும் தென்னை ஊட்டசத்துப் பற்றாக்குறையை வெளிக்காட்டுவதிலும், இடக்கூடிய சத்தை எடுத்துக்கொண்டு நிவா்த்திசெய்துகொள்வதிலும் மெதுவான செயல்பாடு கொண்டது. எனவே, தொடா்ந்து தேவையான பேரூட்ட சத்துகளையும், 2-ஆம் நிலை ஊட்ட சத்துகளையும், நுண்ணூட்ட சத்துகளையும் இடுவதன் மூலம் தொடா்ந்து அதிகபட்ச உற்பத்திக்கும், உற்பத்தி திறனை உறுதி செய்வதற்கும் மற்றும் தரமான விற்பனைக்கு ஏற்ற காய்கள் உருவாவதற்கும் ஒருங்கிணைந்த உரமேலாண்மை மிகவும் இன்றியமையாதது. எனவே, குட்டை மற்றும் நெட்டையாக வளரும் தென்னை ரகம், ஒட்டு ரகங்களுக்கான உரமேலாண்மை குறித்து சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத் துறை அலுவலரை தொடா்புகொண்டு அதன்படி பின்பற்றி தென்னையில் கூடுதல் மகசூல் பெறலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.