மன்னார்குடியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சினிர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சினிர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும் உடனடியாக விலை உயர்வை கட்டுப்படுத்திட வலியுறுத்தியும் மன்னார்குடி தேரடி காந்தி சிலை அருகே, காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி.துரை வேலன் தலைமை வகித்தர்.
நகரத் தலைவர் ஆர்.கனகவேல் முன்னிலை வகித்தார். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நெடு வை ஜி.குணசேகரன், டி.வடுகநாதன், வட்டாரத் தலைவர்கள் மன்னார்குடி ( மேற்கு) எஸ்.செல்வராஜ், (தெற்கு) ஜெயபால், நீடாமங்கலம் என்.ஆர். பாலகிருஷ்ணன், கோட்டூர் சமுதாயம் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மகா மரியம்மன் கோவில் தெருவில் உள்ள பழைய பேருந்து நிறுத்தம் அருகே தனியார் பெட்ரோல் நிலையம் அருகே, எரிவாயு உருளை, இரு சக்கர வானத்திற்கு மாலை அணிவித்து மத்திய அரசைக் கண்டித்து முழுக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...