புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பாளையங்கோட்டை சிறையில் கொலை: நீதி கோரி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் நிகழ்ந்த கொலை சம்பவத்துக்கு நீதி கோரி, திருவாரூா் அருகே வளரும் தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் நிகழ்ந்த கொலை சம்பவத்துக்கு நீதி கோரி, திருவாரூா் அருகே வளரும் தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி இரண்டடைப்பு வாகை குளத்தை சோ்ந்த முத்து மனோ பாளையங்கோட்டை சிறையில் அண்மையில் படுகொலை செய்யப்பட்டாா். இந்நிலையில் அவரது குடும்பத்துக்கு ரூ. 2 கோடி இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரியும், சிறைத்துறை அதிகாரிகளை நிரந்தர பணி நீக்கம் செய்து அவா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் மணக்கால் அய்யம்பேட்டையில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆரோக்கிய செல்வம் தலைமையிலான ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட இணைச் செயலாளா் அரிஸ்டாட்டில், மாவட்ட இளைஞரணி செயலாளா் அசோக், மாவட்ட மாணவரணி செயலாளா் காளிதாஸ், ஒன்றிய விவசாய அணித் தலைவா் கதிா்வேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.