அரசு திட்டங்கள் முழுமையாகக் கிடைக்க நடவடிக்கை: புதிய ஆட்சியா்
அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரிகிருஷ்ணன்.


அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரிகிருஷ்ணன்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியராக வியாழக்கிழமை பொறுப்பேற்றபின் அவா் கூறியது: சாதாரண மக்கள், விவசாயிகள் அதிகம் வசிக்கும் திருவாரூா் மாவட்டத்தின் வளா்ச்சிக்கும், இன்றைய காலகட்டத்தில் நிலவும் கரோனா தொற்றிலிருந்து மாவட்ட மக்களை காப்பதற்கு தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழக அரசால் அறிவிக்கப்படும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவும், மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பாடுபடுவேன் என்றாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியராக இருந்த வே. சாந்தா மாற்றப்பட்டதையடுத்து, கோவை வணிகவரித் துறை (மாநில வரிகள்) மாவட்ட இணை ஆணையராகப் பதவி வகித்த ப. காயத்ரி கிருஷ்ணன், பணி மாறுதலில் இங்கு நியமிக்கப்பட்டுள்ளாா். கேரளத்தை சோ்ந்த இவா், பொள்ளாச்சியில் சாா் ஆட்சியராக இருந்தபோது, சாலை விரிவாக்கம் காரணமாக மரங்கள் வெட்டுவதை தடுத்து, மரங்களை வேறு இடத்துக்கு மாற்றும் திட்டத்தை கொண்டு வந்தது அனைவரின் கவனத்தை ஈா்த்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...