மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கேஸ் தட்டுப்பாடு: நெல்லை இருட்டுக் கடை அல்வா விலை உயர்வு!

நெல்லை இருட்டுக் கடை அல்வா விலை ஏற்றப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

இருட்டுக் கடை அல்வா

கோப்புப்படம்

Updated On :24 மார்ச் 2026, 8:05 am

இணையதளச் செய்திப் பிரிவு

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, நெல்லை இருட்டுக் கடை அல்வாவின் விலை ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று திருநெல்வேலி அல்வா. வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, தயாரிப்புப் பணிகள் இன்றுடன் நிறுத்தப்படுவதாக ‘சாந்தி ஸ்வீட்ஸ்’ கடை தெரிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள கேஸ் தட்டுப்பாடு காரணமாக, அல்வா உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு உணவகங்கள் செயல்படாமல் இருந்து வரும் நிலையில், அல்வா விற்பனையும் பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியாக, நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக் கடை அல்வாவின் விலை ஏற்றப்பட்டுள்ளது.

நெல்லை இருட்டுக்கடை அல்வாவின் விலையானது, ஒரு கிலோ ரூ. 400-ல் இருந்து ரூ. 440 ஆக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

பாரம்பரியமான செய்யப்படும் அல்வா தொழில் பாதிக்கப்படாமல் இருக்க, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.