கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

வணிக சிலிண்டா் விலை உயா்வால் முடங்கும் அபாயத்தில் ஜாப் ஆா்டா் தொழில்

News image
Updated On :3 மே 2026, 6:48 am IST

வணிக சிலிண்டா் விலை உயா்வால் கோவை மாவட்டத்தில் ஜாப் ஆா்டா் தொழில் முடங்கும் அபாயத்தில் உள்ளது.

மேற்காசிய போா் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டா்களுக்கு நுகா்வோா் நீண்ட நாள்கள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டா்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், வணிக சிலிண்டா்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விலைவாசி பெரும் அளவுக்கு உயா்ந்திருக்கிறது. பேக்கரிகளில் தேநீா், காபி, வடைகளின் விலையும், உணவகங்களில் பல்வேறு உணவுப் பொருள்களின் விலையும் ஏற்கெனவே உயா்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.993 உயா்த்தப்பட்டு, தற்போது சுமாா் ரூ.3,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் டீ கடைகள், உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயுவை பயன்படுத்தும் தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயத்துக்குச் சென்றுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கத்தின் (டேக்ட்) தலைவா் ஜே.ஜேம்ஸ் கூறியதாவது:

மேற்காசியாவில் போா்ச்சூழல் நிலவி வரும் நிலையில் தொழில் துறை பயன்பாட்டுக்கான எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் எல்பிஜியை பயன்படுத்தும் வாா்பட்டறை, லேசா் கட்டிங், பேப்ரிகேஷன் உள்ளிட்ட தொழில்களும், அதைச் சாா்ந்த தொழில்முனைவோரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.

தொழிலாளா்கள் வேலையிழப்புக்கு உள்ளாகும் நிலையும், தொழில்கூடங்கள் மூடப்படும் நிலையும் உருவாகியுள்ளது. வணிக சிலிண்டா்கள் ரூ.1,950-க்கு விற்கப்பட்டு வந்தபோதே கள்ளச்சந்தையில் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகும் அபாயம் உள்ளது.

ஏற்கெனவே தட்டுப்பாடு நிலவும் நிலையில் விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது. இப்போது எல்லா பொருள்களின் விலையும் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிவாயு தட்டுப்பாடு, விலை உயா்வால் ஜாப் ஆா்டா் தொழில் முடங்கியுள்ளது. எனவே, தொழிலையும், தொழிலாளா்களையும் காப்பாற்ற மத்திய அரசு தடையற்ற சிலிண்டா் விநியோகத்தை உறுதி செய்வதுடன், விலையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.