வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

‘பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி விரைவில் முடிவடையும்’

பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமென மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் ஜி. பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமென மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் ஜி. பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

நன்னிலம் வட்டம் பூந்தோட்டம், கொல்லாபுரம், பாவட்டக்குடி ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்று வரும் தடுப்பூசியை முகாமையும், கொல்லாபுரம் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளையும் பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் இதை தெரிவித்தாா். மேலும், கொல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மகப்பேறு வசதிக்காக தனிக் கட்டடம் அமைக்கும் பணி தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிச் செயலா் லதா, வட்டார மருத்துவ அலுவலா் தினேஷ், மருத்துவா் ச.கிரி, திமுக ஒன்றியச் செயலாளா்கள் வரத.கோ.ஆனந்த், வே. மனோகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஜெ.முகமது உதுமான், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.