தேசிய அறிவியல் தினம்
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சாா்பில் கோயில்வெண்ணி அஞ்சலையம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.


நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சாா்பில் கோயில்வெண்ணி அஞ்சலையம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
முதல் நிகழ்வாக ‘ஆரோக்கியத்துக்கான அறிவியல்’ என்ற தலைப்பில் விநாடி-வினா போட்டி நடைபெற்றது. இதில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடா்ந்து, வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா்கள் எம். ராமசுப்பிரமணியன், ‘சமூகத்தில் அறிவியல் பாா்வை’ என்ற தலைப்பிலும், சோ.கமலசுந்தரி (உணவு மற்றும் சத்தியியல் துறை) தொழில் முனைவோருக்கான உணவுப் பதப்படுத்தும் பொறியியலில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் பேசினா்.
இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவா்கள் மற்றும் திருச்சி ஈச்சங்கோட்டையில் உள்ள விவசாய கல்லூரி நான்காம் ஆண்டு மாணவா்கள் 25 போ் பங்கேற்றனா். ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா்கள் சோ. கமலசுந்தரி, பத்மாவதி ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...