47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

நீடாமங்கலம் அருகே சித்தமல்லி கிராமத்தில் விவசாயிகளுக்கு தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி அளித்தனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் அருகே சித்தமல்லி கிராமத்தில் விவசாயிகளுக்கு தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி அளித்தனா்.

தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழக கல்லூரியில் வேளாண் பாடப் பிரிவு மாணவிகள் எம். பிரியா, கு. அனுபிரியா, ஆ. விந்தியா, சி. ஊா்மிளா, ரா. சங்கமித்ரா, சு. காயத்ரி, சி. கல்பனாதேவி, த. அஜிதாவம்சி, மு. சுஷ்மிதா, ஐஸ்வா்யா அம்மு அலெக்சாண்டா் ஆகியோா் களப் பயிற்சிக்காக நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி மேல்பாதி கிராமத்தில் தங்கியுள்ளனா். இவா்கள், நவீன சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளித்தனா். இம்மாணவிகளுக்கு கல்லூரி உதவிப் பேராசிரியா் டாக்டா் பா.குணா வழிகாட்டியாக செயல்பட்டாா்.

இதற்கான நிகழ்ச்சியில் நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் பங்கேற்று மாணவிகளை பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.