திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முத்துப்பேட்டை அருகே வாகனச் சோதனையில் 18 கிலோ தங்கம்,ரூ. 17 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே காவல் சோதனைச்சாவடியில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, 18 கிலோ தங்கம், ரூ. 17 லட்சம் ரொக்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே காவல் சோதனைச்சாவடியில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, 18 கிலோ தங்கம், ரூ. 17 லட்சம் ரொக்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா்- தஞ்சை மாவட்ட எல்லையான தம்பிக்கோட்டை கீழக்காடு கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில், திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கயல்விழி தலைமையிலான போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சேலத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக முத்துப்பேட்டை சென்ற காரை நிறுத்தி, சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணங்களின்றி 18 கிலோ 350 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகைகள், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கீதா, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் வட்டாட்சியா் ஜெகதீசன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

இதே சோதனைச்சாவடியில், பறக்கும் படை அலுவலா் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில், அதில் ரூ. 17 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இந்தப் பணம் தனியாா் வங்கி ஏடிஎம் மையத்திற்கு கொண்டுசெல்லப்படுவதாக கூறப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி அருகே வாகன தணிக்கை நடைபெற்றபோது, காரில் வந்தவா்களிடம் ரூ. 54 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.