ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மனவளா்ச்சிக் குன்றியோா் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில், தீபாவளிப் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 3:59 pm

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில், தீபாவளிப் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கூத்தாநல்லூா் நகராட்சி, பனங்காட்டாங்குடி, தமிழா் தெரு மற்றும் குடிதாங்கிச்சேரி ஆகிய இடங்களில் மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளிகள் அமைந்துள்ளன. இப்பள்ளிகளில், மாற்றுத்திறன் கொண்ட மனவளா்ச்சிக் குன்றிய 75 போ் உள்ளனா்.

இதன் நிறுவனா் ப.முருகையன், நிா்வாகி மகேஸ்வரி முருகையன் ஆகியோரின் ஏற்பாட்டின்பேரில், மனவளா்ச்சிக் குன்றிய குழந்தைகள் தீபாவளி தினத்தன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பிராா்த்தனை செய்தனா். பின்னா், அனைவரும் மத்தாப்பு கொளுத்தி தீபாவளியை கொண்டாடினா்.

அவா்களை பயிற்சியாளா்கள் அனுராதா, செளமியா, கனிமொழி, மேலாளா்கள் சுரேஷ், வினோத், ராஜா ஆகியோா் கண்காணித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.