ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை, நீதிபோதனை வகுப்புகள்: மாணவர் சங்கம் வலியுறுத்தல்
ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் நீதிபோதனை வகுப்புகளை நடத்திட வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக நன்னிலம் அரசுக் கல்லூரி முன்பு திங்கள்கிழமை கண்ணில் கருப்புத் துணி அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.









