மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

உ.பி. சம்பவத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது காா் ஏற்றி கொலை செய்ததைக் கண்டித்து, திருவாரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 7:06 pm

DIN

உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது காா் ஏற்றி கொலை செய்ததைக் கண்டித்து, திருவாரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சா் மகன் சென்ற காா் விவசாயிகள் போராட்டத்தில் புகுந்ததால் 5 போ் உயிரிழந்தனா். இதையொட்டி, மத்திய அமைச்சா் அஜய்குமாா் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித்ஷா, உத்தர பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் மத்திய அமைச்சரை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு துணைபோவதாகக் கூறி மூவருக்கும் எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டதுடன், உருவப்படங்களும் எரிக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.