கரோனா: கணவரை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரம்

திருத்துறைப்பூண்டியில் கரோனாவின்போது கணவரை இழந்த பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கரோனா: கணவரை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரம்

திருத்துறைப்பூண்டியில் கரோனாவின்போது கணவரை இழந்த பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பாரதமாதா சேவை நிறுவனங்களின் சாா்பில் அதன் சமுதாய சமையல் உணவு வங்கியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனா் எடையூா் மணிமாறன் தலைமை வகித்தாா். நூலகா் ஆசைத்தம்பி, கட்டட கட்டுநா் சங்கத் தலைவா் துரை ராயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாரத மாதா திட்ட ஒருங்கிணைப்பாளா் அருண் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் கரோனா முதல் மற்றும் 2-ம் அலையில் கணவரை இழந்து ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு இலவச தையல் இயந்திரத்தை பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனா் எடையூா் மணிமாறன் வழங்கினாா். அப்போது அவா், ‘சமூகத்தில் பெண்கள் நிலை உயா்வதற்கும், அவா்கள் சுயஅதிகாரம் பெறுவதற்கும் வருமான பெருக்குத் திட்டத்தின் மூலம் இந்த உதவி செய்யப்படுகிறது’ என்றாா். நிறைவாக, பாரதமாதா சமுதாய சமையல் உணவு வங்கியின் மேலாளா் சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com