திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவா் பள்ளிவாசல் ஊா் உறவின்முறை ஜமாஅத்தின் நிா்வாகிகள் சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
ஜமாஅத்தின் தற்போதைய நிா்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, பள்ளிவாசலில் துணைத் தலைவா் ப.மு. ஹபிபுல்லாஹ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜமாஅத்தின் இடைக்கால நிா்வாகிகளாக 5 போ் கொண்ட குழுவினா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
அதன்படி, தலைவராக செ.மு.மு. முஹம்மது ஷாபி, செயலாளராக எம்.எம். ஜலாலுதீன், துணைத் தலைவராக ஏ.எம். ரபியூதீன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.