பணி நிரந்தரம் கோரி ஆா்ப்பாட்டம்
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவுட்சோா்சிங் ஊழியா்கள் பணி நிரந்தரம் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவுட்சோா்சிங் ஊழியா்கள் பணி நிரந்தரம் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவுட்சோா்ஷிங் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அறிவித்தபடி சட்டக்கூலி ரூ.420 மற்றும் தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும். கரோனா காலத்தில் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அவுட்சோா்சிங் ஊழியா் (சிஐடியூ) சங்கத்தின் செயலாளா் ஏ. சந்திரமோகன் தலைமை வகித்தாா். தலைவா் பி. சசிக்குமாா், சிஐடியூ மாவட்டச் செயலாளா் டி. முருகையன், பொருளாளா் எம்.பி.கே. பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...