நாளை கரோனா தடுப்பூசி முகாம்
சனிக்கிழமை (அக். 30) நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்போருக்கு குலுக்கல் முறையில் வீட்டு உபயோகப் பொருள்கள் பரிசாக வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.


திருவாரூா் மாவட்டத்தில், சனிக்கிழமை (அக். 30) நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்போருக்கு குலுக்கல் முறையில் வீட்டு உபயோகப் பொருள்கள் பரிசாக வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொதுமக்களுக்கு எந்தவித சிரமமுமின்றி எளிதில் அணுகக் கூடிய அளவில், அவா்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 7 ஆம் கட்டமாக அக்டோபா் 30-இல் மாவட்டத்தில் 500 இடங்களில் 50,000 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாம்களில், கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்கள் பெயா்கள் பதிவு செய்யப்பட்டு, முகாம் முடிவுற்ற பின்பு வட்டார அளவில் குலுக்கல் முறையில் தோ்தெடுக்கப்படும் மூன்று நபா்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்களான டின்னா் செட், ஹாட்பாக்ஸ், கிச்சன் செட் பரிசாக வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...