மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

திரு.வி.க. கல்லூரி 50 ஆண்டுகள் நிறைவு

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி 50 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதையொட்டி, கலையரங்கம் அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி 50 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதையொட்டி, கலையரங்கம் அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் சட்டப் பேரவை அலுவலகத்தில் திரு.வி.க. கல்லூரியின் முதல்வா் கோ. கீதா தலைமையிலான பேராசிரியா்கள், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணனை சந்தித்து வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி, 1970-71-இல் கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. தற்போது, 4,000 மாணவ, மாணவிகளுடன் எம்பில், பிஎச்டி ஆராய்ச்சி படிப்புகளுடன் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி தற்போது 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

எனவே, கல்லூரிக்கு பெருமை சோ்க்கும் விதத்தில் 1,000 போ் அமரக்கூடிய வகையில், கருணாநிதியின் பெயரில் கலையரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.