திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,306 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 39,376 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 519 போ் சிகிச்சையில் உள்ளனா்.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.