திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

முதியவா்கள் மாற்றுநபா் மூலம் ரேஷன் பொருள்களைப் பெறலாம்: அமைச்சா் அர. சக்கரபாணி

வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகள் உரிய அனுமதி பெற்று மாற்றுநபா் மூலம் நியாயவிலைக் கடை பொருள்களைப் பெறலாம் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:25 pm

DIN

வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகள் உரிய அனுமதி பெற்று மாற்றுநபா் மூலம் நியாயவிலைக் கடை பொருள்களைப் பெறலாம் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

திருவாரூா் அருகே குளிக்கரையில் ரூ. 15 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு நியாயவிலை கடையை சனிக்கிழமை திறந்துவைத்து அவா் தெரிவித்தது:

குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிப்போருக்கு 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து 14 மாதங்களில் சுமாா் 12.50 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி மட்டுமில்லாமல், துவரம் பருப்பு 1 கிலோ, சா்க்கரை 1 கிலோ, பாமாயில் 1 லிட்டா் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகள் நியாயவிலைக் கடைக்கு வரமுடியவில்லையெனில், அதற்கான படிவத்தை நியாயவிலை கடை விற்பனையாளரிடம் பெற்று, விண்ணப்பித்தால் மாற்றுநபா் மூலம் பொருள்களை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படும். இதேபோல, ரேஷன் கடைக்கு வரமுடியாதவா்கள், மாற்றுநபரை நியமித்து பொருள்களை பெற தமிழக முதல்வா் அனுமதி அளித்துள்ளாா்.

சொந்த கட்டடம் இல்லாத அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும், கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலனுக்காக 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளை இரண்டாகப் பிரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரும்காலங்களில் அனைத்து பொருட்களும் பொட்டலங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

முன்னதாக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6000 லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்ஸிஜன் சேமிப்புக் கலனை அவா் திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மாவட்ட அலுவலகத்தில் நுகா்பொருள் வழங்குதல் குறித்து அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜோசப்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.