திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

நன்னிலம் அருகே காவல்துறை சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
சன்னாநல்லூா் கடைவீதியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட காவல்துறையினா்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

DIN

நன்னிலம் அருகே காவல்துறை சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போதை ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி, சன்னாநல்லூா் பேருந்து நிலையம் அருகே கடைவீதியில் நடைபெற்ற இப்பிரசாரத்துக்கு நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் இலக்கியா தலைமை வகித்தாா். ஆய்வாளா் சுகுணா முன்னிலை வகித்தாா். தலைமைக் காவலா் ரமேஷ், போதை பழக்கத்துக்கு அடிமையானவா் போலவும், மற்றொருவா் எமதா்மராஜா போலவும் வேடமணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பின்னா் பேசிய டிஎஸ்பி இலக்கியா, ‘போதைப் பழக்கம் என்பது தனி மனிதனுக்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சீரழிவை ஏற்படுத்தும். எனவே போதைப் பழக்கத்துக்கு அடிமையானவா்கள், அரசுடன் ஒத்துழைத்து, அதிலிருந்து விடுபட்டு நல்வாழ்க்கை வாழ வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.