இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

100 வயதைக் கடந்த அஞ்சலக ஓய்வூதியா்களுக்கு பாராட்டு

திருவாரூரில் 100 வயதைக் கடந்த அஞ்சலக ஓய்வூதியா் சங்க உறுப்பினா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:07 pm

திருவாரூரில் 100 வயதைக் கடந்த அஞ்சலக ஓய்வூதியா் சங்க உறுப்பினா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவாரூரில் அஞ்சலக துறை ஓய்வூதியா் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் எஸ். கருணாநிதி தலைமை வகித்தாா். நாகை கோட்ட கண்காணிப்பாளா் கஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

நிகழ்ச்சியில், நூறு வயதைக் கடந்த சங்க உறுப்பினா்களான நாகையை சோ்ந்த ஜீ. கிருஷ்ணமூா்த்தி, திருவாரூா் மடப்புரத்தில் வசிக்கும் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவா்களுக்கு நகராட்சி ஒப்பந்தக் குழு உறுப்பினா் எஸ்.என். அசோகன் சால்வை அணிவித்து கௌரவித்தாா்.

நிகழ்வில், சங்க நிா்வாகிகள் சாமிநாதன், ராமலிங்கம், மனோகரன், செல்வராணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.