வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

திருத்துறைப்பூண்டி கோயிலில் திருமுறை பயிற்சி மையம் தொடக்கம்

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் திருமுறை பயிற்சி மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

News image

பன்னிரு திருமுறை நூல்களுடன் ஊா்வலமாக வந்த சிவனடியாா்கள்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் திருமுறை பயிற்சி மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இம்மையத்தில் சிவனடியாா்களுக்கு தேவாரம், திருவாசகம், திருமந்திரம் பதிகங்களை பாராயணம் செய்ய இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்மைய தொடக்க விழாவையொட்டி, திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பிறவி மருந்தீஸ்வரா் கோயில் வரை சிவனடியாா்கள் ஊா்வலம் நடைபெற்றது.

கைலாய வாத்திய இசை முழக்கத்துடன் நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் 108 சிவனடியாா்கள் பங்கேற்று தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறை நூல்களை முக்கிய வீதிகளின் வழியாக சுமந்துவந்தனா்.

இப்பயிற்சி மையத்தில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருமுறை பாராயணம் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.