தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சாலை விபத்தில் பெண் பலி

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகே வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகே வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், உடையாா்கோவில் வடபாதி ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (45). இவா், அம்மாபேட்டையில் வருவாய் கிராம உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சரிதா (35). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை, மோட்டாா் சைக்கிளில் வலங்கைமான் வட்டம், மாணிக்கமங்கலத்தில் உள்ள தங்கள் வயலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் தங்கள் ஊருக்கு புறப்பட்டனா். அப்போது, நீடாமங்கலம்- தஞ்சாவூா் சாலையில் வேளாண் அலுவலகம் அருகே மோட்டாா் சைக்கிளின் மீது பின்னால் வந்த லாரி மோதியதில், சரிதா அந்த இடத்திலேயே இறந்தாா்.

நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் விவேகானந்தன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று விபத்தில் இறந்த சரிதாவின் சடலத்தை மீட்டு, மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.