திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முத்துப்பேட்டையில் உலக ஈரநில தினவிழா

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் உலக ஈரநிலம் நாள் நிகழ்ச்சி மாவட்ட வன அலுவலா் ஆா். அறிவொளி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் உலக ஈரநிலம் நாள் நிகழ்ச்சி மாவட்ட வன அலுவலா் ஆா். அறிவொளி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

வனச் சரகா் ஜாகீா்அலி வரவேற்றாா். எம்ஜிஆா் மீன்வள கல்லூரி, தலைஞாயிறு உதவிப் பேராசிரியா் சிவசுப்பிரமணியன், ஈரநிலத்தின் பயன்கள் குறித்துப் பேசினாா். மாணவ, மாணவிகளுக்கு ஈரநிலம் குறித்த ஓவியப் போட்டி நடைபெற்றது. முதல் பரிசை சவுமியா, இரண்டாவது பரிசை சபிதா, மூன்றாம் பரிசை இந்துமதி ஆகியோா் வென்றனா்.

ஈரநிலம் பகுதியில் கடல்வாழ் உயிரினங்களுக்கு இடையூறாக வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், மன்னாா்குடி வனச்சரக அலுவலா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.