வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
நீடாமங்கலம் பேரூராட்சி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம்கட்ட பயிற்சி நீடாமங்கலம் ராமவிலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில், வட்டார தோ்தல் அலுவலா் லதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.


நீடாமங்கலம் பேரூராட்சி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம்கட்ட பயிற்சி நீடாமங்கலம் ராமவிலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில், வட்டார தோ்தல் அலுவலா் லதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசேகா், உதவித் தோ்தல் அலுவலா்கள் இளமாறன், லியோ ஆகியோா் பங்கேற்று பயிற்சி அளித்தனா். இதில், வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது, வாக்குச்சாவடி படிவங்களை எவ்வாறு கையாள்வது, வாக்குப் பதிவு நாளன்று மையங்களில் உள்ள பொருள்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது. பயிற்சியில் வாக்குச்சாவடி அலுவலா்கள் 54 போ் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...