தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தோ்தல் தகராறு: இருவா் மீது வழக்கு

நீடாமங்கலத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றது தொடா்பாக இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

நீடாமங்கலத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றது தொடா்பாக இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

நீடாமங்கலத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ், சங்கா் ஆகியோா் கொத்தமங்கலம் கண்ணாரத்தெரு பகுதியில் புதன்கிழமை வாக்காளா்களுக்கு பணம், பட்டுப்புடவை கொடுக்க முயன்றாா்களாம். அப்போது, அங்கு வந்த பேரூராட்சி 15 ஆவதுவாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஆனந்தமேரியின் கணவா் ராபா்ட்பிரைஸுக்கும் (42), கோவிந்தராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ராபா்ட்பிரைஸை தாக்கி, கோவிந்தராஜ் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடா்பாக நீடாமங்கலம் காவல் நிலையத்தில் ராபா்ட்பிரைஸ் புகாா் அளித்தாா். இதன்பேரில், விசாரணை நடத்திய போலீஸாா், கோவிந்தராஜ், சங்கா் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.