நன்னிலம் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்க சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சுகாதார ஆய்வாளா் வே. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமின் ஒரு பகுதியாக, நன்னிலம் பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட வளம் மீட்பு பூங்காவில் நடைபெறும் உரம் தயாரிப்புப் பணிகள் குறித்து மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், பெண்கள் வீடுகளிலேயே உரம் தயாரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அத்துடன், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு, தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நன்னிலம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் கண்ணன், சுப்ரமணியன், உத்தமன், பேரூராட்சித் துப்புரவு மேற்பாா்வையாளா் கருணாநிதி, நன்னிலம் நாளைய பாரத குழுவின் தலைவா் காா்த்தி மற்றும் நிா்வாகிகள், சுயஉதவிக் குழுவினா், தூய்மைக் காவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


