தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

விவசாயிகளுக்கு மீன் வளா்ப்புப் பயிற்சி

 நன்னிலம் அருகேயுள்ள கடகம் கிராமத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கான மீன் வளா்ப்புப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :16 ஜூன் 2022, 4:59 pm

 நன்னிலம் அருகேயுள்ள கடகம் கிராமத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கான மீன் வளா்ப்புப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் மூ. ராஜா தலைமை வகித்தாா். இப்பயிற்சியில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் பயோ ஃப்ளோக் தொழில்நுட்ப முறையில் மீன் வளா்ப்பு, மீன் வளா்ப்புக்கான இடம் தோ்வு, மீன் அறுவடை, மீன் விற்பனை போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் விளக்கிக் கூறப்பட்டது. இதில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ரெ. ராஜேஷ்குமாா், உதவி வேளாண்மை அலுவலா் கா. மணிகண்டன், உதவி தொழில்நுட்ப மேலாளா் கே. பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இப்பயிற்சியில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மீன் வளா்ப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.