தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கூத்தாநல்லூரில் சரிந்து விழும் நிலையில் விநாயகர் கோயில்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பிரதான சாலையில் சரிந்து விழக்கூடிய நிலையில் உள்ள விநாயகர் கோயிலை பாதுகாக்கக் கோரி பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Published On :

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பிரதான சாலையில் சரிந்து விழக்கூடிய நிலையில் உள்ள விநாயகர் கோயிலை பாதுகாக்கக் கோரி பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story image

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட, திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலையில், ராமானுஜ காலனி நுழைவு வாயிலில் கலிதீர்த்த ராஜ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. மிகப் பழமையான இக்கோயில் சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளது. மேலும், வெண்ணாற்றிலிருந்து பிரிந்து வரக்கூடிய, பாசன வாய்க்கால், கழிவு நீர் செல்லும் சாக்கடையாக மாறியுள்ளது.

Story image

இந்த கழிவு நீர் சாக்கடை கோயிலின் பின்புறத்தில் ஓடுகிறது. இந்த கழிவு நீர் சாக்கடையால், விநாயகர் கோயிலின் அடிப்பாகத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கோயிலின் கீழ் பகுதியில் சிமிண்ட் காரைகள் பெயர்ந்து, விநாயகர் கோயில் சரிந்து விழக் கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது.

Story image

கலித்தீர்த்த விநாயகர் கோயில் முழுவதுமாக சேதம் அடையும் முன்பே, பாசன வாய்க்காலாக இருந்து கழிவு நீர் சாக்கடைய மாறியுள்ள வாய்க்காலை பார்வையிட வேண்டும். தொடர்ந்து, வாய்க்கால் தூர் வாரப்பட்டு, வாய்க்காலில் மிதந்தும், குவிந்தும் கவனிப்பாரற்று இருக்கும் கழிவுகளை அகற்றிட வேண்டும். பழுதடைந்துள்ள விநாயகர் கோயிலை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.