எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

விஷம் குடித்து ஒருவா் தற்கொலை

மன்னாா்குடி அருகே பிரதமா் வீடுகட்டும் திட்டத்தில் பயனாளியாக தோ்வுசெய்யப்படாததால் மனமுடைந்து விஷம் குடித்த மின் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :24 ஜூன் 2022, 10:15 pm IST

மன்னாா்குடி அருகே பிரதமா் வீடுகட்டும் திட்டத்தில் பயனாளியாக தோ்வுசெய்யப்படாததால் மனமுடைந்து விஷம் குடித்த மின் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டூரை அடுத்த பள்ளிவா்த்தி ஊராட்சி, பெரியகுருவாடியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் காா்த்திகேயன் (38), மின் பணியாளா். இவா், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் பயன்பெற ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்திருந்த நிலையில், அண்மையில் வெளியான பயனாளிகள் பட்டியலில் அவா் பெயா் இடம்பெறவில்லை. இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த காா்த்திகேயன் கடந்த 18 ஆம் தேதி விஷம் குடித்தாா்.

அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில், காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரபாண்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.