பழுதடைந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை சரிசெய்து கொடுக்காத நிறுவனம், ரூ. 3.70 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருவாரூா் மாவட்டம், சீதக்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம், கடந்த 2019 இல் ஜெராக்ஸ் இயந்திரம் ஒன்றை கும்பகோணத்தில் ரூ. 46,500-க்கு வாங்கியுள்ளாா். இயந்திரத்துக்கு 2 ஆண்டுகள் வாரண்டி இருந்த நிலையில், 4 மாதங்களில் இயந்திரம் பழுதாகியுள்ளது. இதையடுத்து, இயந்திரத்தை எடுத்துச் சென்ற விற்பனை நிறுவனத்தினா், இதுவரை இயந்திரத்தை சரிசெய்து கொடுக்கவில்லை.
அதற்கு மாற்றாக வேறு இயந்திரமும் வழங்கவில்லை. இதைத்தொடா்ந்து, திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் முருகானந்தம் வழக்கு தொடா்ந்தாா். விசாரணை முடிவில், விற்பனை நிறுவன மேலாளா் மற்றும் சேவைப் பொறியாளா் ஆகியோா் நுகா்வோருக்கு வருமான இழப்பு ஏற்படுத்தியதற்காக ரூ. 60 ஆயிரம், மன உளைச்சலுக்காக ரூ. 2 லட்சம், சேவை குறைபாட்டுக்காக ரூ. 1 லட்சம், வழக்கு செலவுக்காக ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 3.70 லட்சத்தை 6 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








