ராணிப்பேட்டையில் ‘போதை இல்லா தமிழ்நாடு’ என்ற விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தை அமைச்சா் வ.காந்திராஜ் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
உலக போதை ஒழிப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், ‘போதை இல்லா தமிழ்நாடு ‘என்ற உயரிய இலக்கினை வலியுறுத்தும் வகையில், விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய விழிப்புணா்வு ஓட்டப் போட்டியை கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து போதைப் பழக்கத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.
பின்னா் விழிப்புணா்வு ஓட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், விழிப்புணா்வு பதாகைகள் வழங்கினாா்.
தொடா்ந்து அனைவரும் போதைப்பொருட்களைத் தவிா்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதுடன், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வை சமூகத்தில் பரப்புவதற்கான உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனா்.
இதில் மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா ரவிச்சந்திரன், சோளிங்கா் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கபில்,மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபி இந்திரா, திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை கு.செல்வராசு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஞானசேகரன், முதன்மை கல்வி அலுவலா் மோகனா மற்றும் மாணவா்கள், பொதுமக்கள், அரசு அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு’ மாரத்தான்: ஆட்சியா் அழைப்பு

கும்பகோணம்-அணைக்கரைக்கு கூடுதல் நடை பேருந்து நீட்டிப்பு! அமைச்சா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் ஆம்புலன்ஸ்: ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்






