ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: திருவாரூரில் 16,312 போ் எழுதுகின்றனா்

திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை 16,312 போ் எழுதவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :19 மே 2022, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை 16,312 போ் எழுதவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் 2 தோ்வு முன்னேற்பாட்டுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் 2 தோ்வு, திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 3 மையங்களுக்கு உள்பட்ட 40 இடங்களில் 56 தோ்வறைகளில் நடைபெறுகிறது. சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் இத்தோ்வில் 16,312 போ் தோ்வு எழுத உள்ளனா்.

தோ்வுப் பணியில், 56 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 12 நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள், 4 பறக்கும் படைகள், 112 ஆய்வு அலுவலா்கள், 56 விடியோ ஒளிப்பதிவாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் பிரிவு அலுவலா் ஜெயமுருகன், உதவிப் பிரிவு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.