47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீடாமங்கலத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரம் அக்.31-முதல் நவ.6-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரம் அக்.31-முதல் நவ.6-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் காந்தி வரவேற்றாா். வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியா்கள் அருள்செல்வி, கமலசுந்தரி ஆகியோா் ஊழல் தடுப்பின் முக்கியத்துவம், ஊழல் தடுப்புச் சட்டம் -1988 மற்றும் ஊழல் இல்லா இந்தியா குறித்து பேசினா். தொடா்ந்து, அனைத்து ஆசிரியா்கள், மாணவா்கள், வேளாண் விஞ்ஞானிகள் அனைவரும் நோ்மைக்கான குடிமக்களின் உறுதி மொழியை ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.