தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கூத்தாநல்லூரில் விவசாயிகள் தொடர் பிச்சையெடுப்பு போராட்டம்

கூத்தாநல்லூரில் விவசாயிகள் தொடர் பிச்சையெடுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :29 நவம்பர் 2022, 3:02 pm IST

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் விவசாயிகள் தொடர் பிச்சையெடுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கூத்தாநல்லூர் அடுத்த சேகரை வருவாய் கிராமத்தில் விவசாயி செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் தொடர் பிச்சையெடுப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

லெட்சுமாங்குடி - கொரடாச்சேரி பிரதான சாலை, சேகரையில் நடைபெற்று வரும் தொடர் பிச்சையெடுப்பு போராட்டம் குறித்து, விவசாயி செந்தில்குமார் கூறியது:

‘சேகரை கிராமப் பகுதியில், மிளகுக் குளம் காலனி, காந்தி காலனி, சேகரை அம்பேத்கர் தெரு, ஜீவா தெரு, கக்கன் நகர், இந்திரா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலம் காலமாக வசிக்கின்றனர்.

விவசாயிகளான இவர்கள் விவசாயம் செய்த விளை  நிலங்களை, விலை நிலங்களாக மாற்றி, மனைப் பிரிவுகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். சிலர், மாற்று வேலை தேடி, பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டு வருகிறது. இவ்விளை நிலங்களை, மனைப் பிரிவுகளாக மாற்ற அனுமதி வழங்கக் கூடாது. மீண்டும் விவசாயம் செய்து, இப்பகுதி விவசாயிகளுக்கு வாழ்வு தர வேண்டும். இது குறித்து பல அதிகாரிகளிடமும், பல மனுக்கள் வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதனால், இரண்டு நாள்களாக தொடர் பிச்சையெடுப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். அடுத்து, சாலை மறியலில் ஈடுபடப் போகிறோம்’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.