அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கூத்தாநல்லூரில் விவசாயிகள் தொடர் பிச்சையெடுப்பு போராட்டம்

கூத்தாநல்லூரில் விவசாயிகள் தொடர் பிச்சையெடுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:58 am

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் விவசாயிகள் தொடர் பிச்சையெடுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கூத்தாநல்லூர் அடுத்த சேகரை வருவாய் கிராமத்தில் விவசாயி செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் தொடர் பிச்சையெடுப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

லெட்சுமாங்குடி - கொரடாச்சேரி பிரதான சாலை, சேகரையில் நடைபெற்று வரும் தொடர் பிச்சையெடுப்பு போராட்டம் குறித்து, விவசாயி செந்தில்குமார் கூறியது:

‘சேகரை கிராமப் பகுதியில், மிளகுக் குளம் காலனி, காந்தி காலனி, சேகரை அம்பேத்கர் தெரு, ஜீவா தெரு, கக்கன் நகர், இந்திரா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலம் காலமாக வசிக்கின்றனர்.

விவசாயிகளான இவர்கள் விவசாயம் செய்த விளை  நிலங்களை, விலை நிலங்களாக மாற்றி, மனைப் பிரிவுகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். சிலர், மாற்று வேலை தேடி, பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டு வருகிறது. இவ்விளை நிலங்களை, மனைப் பிரிவுகளாக மாற்ற அனுமதி வழங்கக் கூடாது. மீண்டும் விவசாயம் செய்து, இப்பகுதி விவசாயிகளுக்கு வாழ்வு தர வேண்டும். இது குறித்து பல அதிகாரிகளிடமும், பல மனுக்கள் வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதனால், இரண்டு நாள்களாக தொடர் பிச்சையெடுப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். அடுத்து, சாலை மறியலில் ஈடுபடப் போகிறோம்’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.