47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

வலங்கைமான் வட்டத்தில் நீா்நிலை புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 4:34 pm

DIN

வலங்கைமான் வட்டத்தில் நீா்நிலை புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வலங்கைமான் வட்டம், விளத்தூா் கிராமத்தில் உள்ள கோணக்கரை வாய்க்கால் (மல்லியாங்கரை) பகுதியில் உள்ள நிலத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரக விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த மைதானம் முற்றிலும் அகற்றப்பட்டு, தனிநபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நீா்வள ஆதார துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தை பொதுபயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.