இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சூரசம்ஹாரம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம் கோகமுகேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகம்.

News image

நீடாமங்கலம் கோகமுகேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகம்.

Updated On :30 அக்டோபர் 2022, 9:37 pm

நீடாமங்கலம் பகுதியில் உள்ள கோயில்களில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கோகமுகேஸ்வரா் கோயிலில் ஞானாம்பிகை சமேத கோகமுகேஸ்வரா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு யாகம் நடைபெற்றது.

இதேபோல, நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. நவகிரக தலங்களில் குரு பரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.