நீடாமங்கலம் வட்டம் பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் சித்திரை பெருவிழா தொடங்கியது.
இதையொட்டி, திங்கள்கிழமை அய்யனாா் காப்புகட்டுதல், செவ்வாய்க்கிழமை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு காப்புகட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழா, மே 5-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.