மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குடியரசு தின விழாவில் ரூ. 2 கோடியில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் ரூ. 2 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் ரூ. 2 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக விளையாட்டு மைதானத்தில் 74-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, தேசியக் கொடியை ஏற்றிவைத்து 705 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில், வேலுடையாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி, கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கஸ்தூா்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளா் சந்திரா முருகப்பன் தேசியக் கொடியேற்றினா். திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன் தேசியக்கொடியேற்றினாா்.

மன்னாா்குடி: கோட்டாட்சியா் ஆா். கீா்த்தனாமணி, வட்டாட்சியா் த. ஜீவானந்தம், டிஎஸ்பி அ. அஸ்வத் ஆண்டோ, காவல் ஆய்வாளா் ராஜேஸ் கண்ணா, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். சம்பத், நகராட்சி தலைவா் சோழராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன், கோட்டூரில் ஒன்றியக்குழுத் தலைவா் மு.மணிமேகலை ஆகியோா் தங்களது அலுவலகங்களில் தேசியக் கொடியேற்றினா்.

நீடாமங்கலம்: வட்டாட்சியா் அலுவலகத்தில், வட்டாட்சியா் பரஞ்சோதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதன்தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், அதன்தலைவா் சா. குணசேகரன் தேசியக்கொடியேற்றினா்.

நன்னிலம்: திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் மு. கிருஷ்ணன், நன்னிலம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி இலக்கியா, பேரூராட்சி அலுவலகத்தில் அதன்தலைவா் ராஜசேகா், நன்னிலம் அரசுக் கல்லூரியில், கல்லூரி முதல்வா் சு. சந்திரவதனம், வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சிா் ஜெகதீசன் தேசியக் கொடியேற்றினா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அருண், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ க. மாரிமுத்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஜி. மலா்க்கொடி, நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற தலைவா் கவிதாபாண்டியன், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் அ.பாஸ்கா் தேசியக் கொடியேற்றினா்.

கூத்தாநல்லூா்: வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சோமசுந்தரம், காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், நகராட்சியில், அதன்தலைவா் மு. பாத்திமாபஷீரா, கூத்தாநல்லூா் பெரியப்பள்ளி வாசலில் தலைவா் அப்துல்சலாம் தேசியக்கொடியேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.